Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

தீர்ப்பு இருக்கட்டும்.. பாஜகவின் உடும்பு பிடியில் எடப்பாடி.. பெரிய ‘செக்’.. விளக்கும் எக்ஸ்பர்ட்!

Wed, 29 Mar 2023 01:10:51 +0530

சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு தற்போது வந்திருந்தாலும், இன்னொரு வகையில் ஈபிஎஸ் பாஜகவிடம் வலுவாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார் என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று

ஆக்‌ஷன் எடுக்கணுமா? டிரெஸ்ஸை அவுத்து காட்டு.. மிட் நைட்டில் பெண்ணுக்கு வீடியோ கால்.. சிக்கிய போலீஸ்!

Tue, 28 Mar 2023 22:22:10 +0530

கான்பூர் : புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், டிரெஸ்ஸை கழற்றி உன் மார்பை காட்டு என போலீஸ் அதிகாரி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேயும் கதையாக, பாதுகாப்பு தர வேண்டிய போலீஸே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர்,

அப்படி போடுங்க.. எடப்பாடிக்கு பறந்து வந்த போன்.. மறுமுனையில் அண்ணாமலை!

Tue, 28 Mar 2023 19:24:38 +0530

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி

திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. ஜப்பானில் 6.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பதறியோடிய மக்கள்

Tue, 28 Mar 2023 18:29:25 +0530

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஹொக்கைடோ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி நாடு ஜப்பான். தீவு நாடான ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் ஜப்பான் இடம் பெற்றுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான்.

\"இம்ரான் கான் கொலை செய்யப்படுவார்,, ஓப்பனாக மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்! பெரும் பரபரப்பு

Tue, 28 Mar 2023 15:56:40 +0530

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது இம்ரான் கான் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. அங்கே ஏற்கனவே பொருளாதார குழப்பம் காரணமாக விலைவாசி உச்சத்தில் உள்ளது அனைவருக்கும் தெரியும். அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் அவர்கள் உதவிக்குச்

கொங்குப் பாசம்? அதிமுகவில் சிக்கல் தீர்ந்தது! எடப்பாடி பழனிசாமிக்கு முதல் ஆளாக ஈஸ்வரன் வாழ்த்து!

Tue, 28 Mar 2023 15:37:40 +0530

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனக்கிருந்த தடைகளை எல்லாம் உடைத்து பொதுச்செயலாளர் ஆகியிருப்பதன் மூலம் அதிமுகவில் எழுந்த சிக்கல் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொங்கு ஈஸ்வரன் விடுத்துள்ள

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம்

Tue, 28 Mar 2023 15:31:19 +0530

ஜெருசலேம்: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தளமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேல் போலீஸ் படை, அங்கே இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். அதேபோல பாலஸ்தீனம் சன்னி இஸ்லாமியர்களைக் கொண்ட பகுதியாகும்.

எஸ்ஐயை அடித்த ராணுவ வீரர் உள்பட 4 பேர்.. தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதால் தென்காசியில் ஷாக்

Tue, 28 Mar 2023 17:26:55 +0530

தென்காசி: சங்கரன்கோவில் அருகே ஆம்லேட் சரியில்லாததால் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீர‌ர் உட்பட 4 பேர் எஸ்ஐயை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, எஸ்ஐயை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 4 பேரை போலீசார் சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் கடைகளில் சாப்பாடு சரியில்லை என்றால் எவ்வளவு

கர்நாடகா: முஸ்லிம், எஸ்சி எஸ்டி இடஒதுக்கீடு விவகாரங்களில் தமக்கு தாமே தலையில் கொள்ளி வைக்கும் பாஜக?

Tue, 28 Mar 2023 14:12:36 +0530

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடிய நிலையில் இடஒதுக்கீடு விவகாரங்களில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது; இது தேர்தலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி

\"புதுசா இருக்கே..\" மக்களுடன் போராட்டத்தில் கைகோர்க்கும் ராணுவம்.? இஸ்ரேலில் என்னதான் நடக்கிறது

Tue, 28 Mar 2023 12:53:14 +0530

ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முயன்றுள்ள நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சம் தொட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேல் நாட்டின் அரசியலில் பவுர்புல் அரசியல்வாதியாக பெஞ்சமின் நெதன்யாகு இருந்து வருகிறார். 2009இல் முதல்முறையாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற அவர், 2021 வரை

எனது பாட்டி மாரியம்மாள் மூச்சுக்காற்று உலவுகிற மண் இந்த மண்! சொந்த ஊரில் துரை வைகோ உருக்கம்!

Tue, 28 Mar 2023 10:29:22 +0530

தென்காசி: கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சொந்த ஊர் மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றிய மன நிம்மதியோடு இருக்கிறார் மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ. 20 ஆண்டுகளாக யாரும் செய்ய முடியாத ஒரு நிகழ்வை 20 மாதங்களில் சலிக்காமல் அமைச்சர்களை மீண்டும் மீண்டும் நேரில் சந்தித்து தனது சொந்த ஊர் மக்களின் மனங்களை

\"உங்க கையில தான் இருக்கு..” விடிந்தால் தீர்ப்பு.. உடனே சென்னைக்கு பறந்து வந்த ஓபிஎஸ் சொன்ன வார்த்தை!

Tue, 28 Mar 2023 07:08:34 +0530

சென்னை : அதிமுகவில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் சட்டப் போராட்டத்தில் இன்று (மார்ச் 28) முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளிக்கவுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில், "இந்த தீர்ப்பு உங்க கையில தான் இருக்கு" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை

கூடங்குளம் அணு உலைக்கு சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..சாலையில் சிதறிய சிலிண்டர்கள்.. பரபரத்த நெல்லை

Mon, 27 Mar 2023 21:01:59 +0530

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 180 ஹைட்ரஜன் வாயு சிலிண்டர்களுடன் வந்துகொண்டிருந்த லாரி ஒன்று நெல்லை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்து சிலிண்டர்கள் அனைத்தும் சாலையில் உருண்டு ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. இந்த அணு மின் நிலையத்திற்கு தேவையான

சசிகலாவின் ஏஜென்ட்.. துரோகி எடப்பாடி வெளியேற வேண்டும்.. பெரும் கூட்டத்தை திரட்டிய ஓபிஎஸ் அணியினர்!

Mon, 27 Mar 2023 20:47:51 +0530

திண்டுக்கல் : துரோகி எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து விலகக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திண்டுக்கல்லில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில்,

இஸ்ரேலில் தீவிரமடைந்த போராட்டம்.. பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராகத் திரண்ட மக்கள்.. பெரும் பதற்றம்!

Mon, 27 Mar 2023 20:30:09 +0530

ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த போராட்டம் படிப்படியாக தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு செயல்பட்டு வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் பிரதமராக பதவி வகித்து வரும் நெதன்யாகு மீது ஊழல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே,

கொரோனா இல்லை.. ஆனாலும் வடகொரியாவில் திடீர் ஊரடங்கு.. காரணத்தை கேட்டா அசந்து போவீங்க! என்னாச்சு?

Mon, 27 Mar 2023 20:17:08 +0530

பியாங்யாங்: மர்மதேசமான வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜான் உன் வித்தியாசமான முறையில் ஆட்சி செய்து வருகிறார். அவர் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவும் வித்தியாசமான முறையில் இருக்கும். அந்த வகையில் தான் வடகொரியாவில் கொரோனா பரவல் இல்லாத நிலையிலும் திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது தற்போது வெளியாகி உள்ளது. உலகில்

நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் தற்கொலை.. கயிறு+சேர் உடன் ஹாஸ்டலுக்கு போன சிசிடிவி காட்சி.. ஷாக்

Mon, 27 Mar 2023 20:10:58 +0530

சேலம் : சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன், விடுதி

வெளிநாட்டு பணம்: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 3.29 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி

Mon, 27 Mar 2023 20:46:25 +0530

திருப்பதி: வெளிநாட்டு பணம் தொடர்பான விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரிசர்வ் வங்கி ரூ 3.29 கோடி அபராதம் விதித்துள்ளது. திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இவரை தரிசனம் செய்ய வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். அது போல் பிரம்மோற்சவம், புத்தாண்டு, கோடை

இதெல்லாம் வேணாம்மா.. எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேக்கலியே.. குறுக்கே வந்த \"மூன்றாவது கை\".. ஷாக்கிங்

Mon, 27 Mar 2023 19:09:32 +0530

செங்கல்பட்டு: திருமணத்தை மீறி உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ள நெல்வாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த விவேக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு

பாலின சோதனை.. 30 ஆயிரம் கொடுத்தால் போதும்.. மொத்தமும் க்ளோஸ்.. குலுங்கிய தருமபுரி.. அதிரடி கைது

Mon, 27 Mar 2023 18:55:25 +0530

தருமபுரி: தருமபுரியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள கருவின் பாலினம் கண்டறியும் பரிசோதனை மையம் நடத்தி சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த 4 பேரை மருத்துவத் துறையினரின் புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர். பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடும் போக்கு மாற

ஹேப்பி.. வாரத்துக்கு ஒருநாள் மாடுகளுக்கு லீவு.. அதுக்காக இப்படியா.. நம்ம ஊர்லதான்.. காரணம் தெரியுமா

Mon, 27 Mar 2023 17:15:37 +0530

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடுகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. இந்த பழக்கம் அம்மாநிலம் முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்பது தற்போது அனைத்து மக்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்நடைகளுக்கு? ஆம் மக்களே ஜார்க்கண்ட் மாநில மக்களும் இதைதான் யோசித்தார்கள். ஒருநாள் வயலில் உழுது கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென

ஒரே ஒரு மரத்திற்கு துப்பாக்கி ஏந்திய.. 4 போலீஸ் பாதுகாப்பு.. ரூ. 12 லட்சம் செலவு.. எதுக்கு தெரியுமா?

Mon, 27 Mar 2023 16:01:22 +0530

போபால்: மத்திய பிரதேசத்தின் ரெய்சன் நகரில் இருக்கும் மரம் ஒன்றிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு இசட், இசட் ப்ளஸ் பாதுகாப்பு போன்ற பாதுகாப்புகளை கொடுத்து நாம் பார்த்து இருப்போம். பிரபலமாக இருக்கும் பலருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு இருக்கும். ஆனால் மரம் ஒன்றிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவது தெரியுமா?

இந்துக்கள் எல்லாருமே பணக்காரர்கள்! நன்கு படித்தவர்களாம்! வெளியான சர்வே முடிவுகள்! பிரிட்டனில்!

Mon, 27 Mar 2023 13:06:06 +0530

லண்டன்: பிரிட்டன் நாட்டில் இந்துக்களின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கீடு தகவல்களில் இருந்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று செட்டிலாகி வருகின்றனர். குறிப்பாக இப்போதும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சென்று செட்டிலாகி வருகின்றனர். ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்களின் தேவை

தனுஷ்கோடியில் உருவான இயற்கையின் அற்புதம்.. நெகிழும் சுற்றுலா பயணிகள்

Mon, 27 Mar 2023 11:55:33 +0530

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் நீரோட்டம் வேறு திசைக்கு திரும்பி மீண்டும் மணல் பரப்பு உருவாகி உள்ளது. இயற்கையின் அதிசயமான நிகழ்வான இது தனுஷ்கோடியில் அவ்வபோது நிகழும். இதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து ரசிக்கிறார்கள். ராமேசுவரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை உள்ளது. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சிதரும் தனுஷ்கோடி

காஷ்மீரின் அடையாளத்தையே மாற்றப்போகும் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம்.. வெளியான சூப்பர் தகவல்

Mon, 27 Mar 2023 08:47:13 +0530

ஸ்ரீநகர்: உலகின் உயரமான ரயில்வே பாலம் காஷ்மீரில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் வருகிற மே மாதம் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். இதனால் இந்த பாலம் திறப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் உலகின் சொர்க்கம் என்று சொல்லும்

1 லட்சம் பழனிசாமிகள் அதிமுகவில் இருக்கிறார்கள்.. யாராலும் தொட்டுப்பார்க்க முடியாது! எடப்பாடி ஆவேசம்!

Mon, 27 Mar 2023 08:27:07 +0530

தஞ்சாவூர் : அதிமுகவில் என்னைப்போல ஒரு லட்சம் பழனிசாமிகள் உள்ளனர். அதிமுகவில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியுள்ளார். தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் மைச்சர் காமராஜ் இல்ல திருமண விழாவில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். தெலுங்கானா

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டா லைவில் கண்ணீர்..!

Sun, 26 Mar 2023 22:58:40 +0530

வாரணாசி : இளம் நடிகை அகன்ஷா துபே, தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான அகன்ஷா துபே ஹோட்டலில் உள்ள ஃபேனில் துணியை பயன்படுத்தி தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இறப்பதற்கு சில மணி

பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யா.. புதின் முடிவால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம்!

Sun, 26 Mar 2023 20:28:14 +0530

மாஸ்கோ : உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, அண்டை நாடான பெலாரசில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள் வழங்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட உதவி புரிந்து வருகின்றன. அமெரிக்கா

இளம்பெண்ணை பிடித்த கரடி.. கிட்ட வந்து மேலே ஏறி.. ஷாக்! அப்போ அந்த பெண் செஞ்ச காரியம் இருக்கே

Sun, 26 Mar 2023 19:06:10 +0530

ஜகார்த்தா: காட்டின் பரப்பளவு குறைவதால் மனித மிருக மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதுபோல நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. உலகமயமாக்கல், தொழில் புரட்சி ஆகியவற்றுக்கு பிறகு காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் காடுகளிலும் கூட மனிதர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டி வருகின்றனர். இதனால்

மோதுவது போல் சென்ற இந்தியா-நேபாள விமானங்கள்.. நடுவானில் திக் திக்..விபத்து தவிர்ப்பு..என்ன நடந்தது?

Sun, 26 Mar 2023 18:22:53 +0530

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டு நோக்கி சென்ற ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மோதுவது போல் அருகருகே சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த திக் திக் சம்பவம் குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம். இமயமலை அடிவாரத்தில்



















franceindia.com